அத்திவரதர் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் பலி! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு !

அத்திவரதர் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் பலி! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு !

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு பின் தோன்றி இருப்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அரசு மற்றும் கோவில் அதிகாரிகள் எதிர்ப்பார்த்ததை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.இந்த கூட்ட நெரிசலால் பல உயிரிழப்பு ஏற்படுகிறது.இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிர் இழந்தனர்.

உயிர் இழந்த பக்தர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் என அறிவித்தார்.இந்நிலையில் சென்னையை சார்ந்த விருகம்பாக்கம் பகுதியை சார்ந்த ஆறுமுகம் என்ற முதியவர் கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.

இதுவரை அத்திவரதர் தரிசனம் செய்ய வந்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று இறந்தவர்கள் இல்லாமல் இதற்கு முன் 2 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube