ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த தந்தை – தாய் – மகன்! கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் போலீசார்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முரஸ்திபாத் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர்  அவர்களது வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.
முராஷ்திபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகாஞ்ச்  எனும் ஊரில் வசித்து வந்துள்ளார் போர்நாத் கோபால், இவரது மனைவி பெயர் பியூட்டி, மகன் பெயர் அங்கண்.  போர்நாத் கோபால் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்துகொள்ள வராததாலும், வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததாலும் சந்தேகமடைந்த அக்கம் பக்க்கத்தினர் உடனே, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் வந்த காவல்துறையினர், போர்நாத் கோபால் வீட்டை திறந்து பார்த்தபோது, போர்நாத் கோபால், அவரது மனைவி மற்றும் மகன் என மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இதனை அடுத்து, போலீசார், ‘ இவர்களை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டனரா, எதற்காக கொன்றார்கள்,’ என விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.