ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் – மத்திய அமைச்சர் தகவல் !

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மத்திய உணவுத்துறை அமைச்சகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் விரிவான கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாடு ; ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள எந்த ரேசன்கடையிலும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை மானியவிலையில் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ரேஷன் அட்டை இருந்தாலே போதுமானது என்றும் கூறியுள்ளார்.