காஞ்சிபுரம் அருகே நேற்று வெடித்த அதே இடத்தில் மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியுள்ளது

தமிழகத்தில் இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக,  உளவுத்துறை ரகசிய தகவல் கொடுத்திருந்தது. இது குறித்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் அருகே திருப்போரூர் என்ற இடத்தில் ஒரு மர்மப் பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.

இதனால், போலீசார் தீவிரமாக அந்த இடத்தில் விசாரித்து சோதனையிட்டு வருகின்றனர். தற்போது, மேலும் ஒரு வெடிபொருள் காஞ்சிபுரம் திருப்போரூரில் கிடைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வெடி பொருளை எப்படி செயலிழக்க செய்வது என வெடிகுண்டு சிறப்பு அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.