திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மகேந்திரன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மகேந்திரன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்

மகேந்திரன் குடும்பத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், திரையுலகின்  சார்பிலும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும்  வலம் வந்தவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழில்  “முள்ளும் மலரும்” , “உதிரிப் பூக்கள்” ஆகிய பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தமிழ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இவர் சமீப காலமாக பல படங்களில் ஒரு நடிகராக வலம் வந்தவர். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் பிரபலமான நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரில்லாமல் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டார்.சில நாள்களாக இவர் மருத்துவமனையில் இருந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று காலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்இறந்த மகேந்திரன் குடும்பத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், திரையுலகின்  சார்பிலும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.
author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *