வயதானவர்களுக்கு நடைமேடையிலேயே ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் தேவை-தமிழச்சி தங்கபாண்டியன்

வயதானவர்களுக்கு நடைமேடையிலேயே ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்.

சென்னையில் ரயில்வே பொது மேலாளரை எம்.பி.க்கள் சந்தித்தார்கள்.இதன் பின்னர் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், ரயில்வே போட்டித் தேர்வுகளில் மாநில மொழி கட்டாயம் என வலியுறுத்தினோம்.

வயதானவர்களுக்கு நடைமேடையிலேயே ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் தேவை என கோரிக்கை வைத்துள்ளோம்.ரயில்வே கடைநிலை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கோரிக்கை வைத்தோம் என்று தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.