பிபின் ராவத்துக்கு உதவ அதிகாரிகள் நியமனம் ..!

பிபின் ராவத்துக்கு உதவ அதிகாரிகள் நியமனம் ..!

  • முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.
  • முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர்.

இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. அண்மையில் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை  உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.இதனால் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.பின்னர்  பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார்.இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையின் கீழ் 2 இணை செயலாளர்கள், 13 துணை செயலாளர்கள், 22 செயலாளர்கள் செயல்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube