தமிழ் மொழியை போல இனிய மொழியை எங்கும் காண இயலாது : நடிகர் சூரி

நடிகர் சூரி பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சேலம் அழகாபுரத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழி போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என்று தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளரை சந்தித்த இவர், மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துவதாகவும், அதனை அளவோடு பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.