அக்-22 கருப்பு தினம்: பாக்.,எதிர்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்..!

பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஆக்ரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்,.22 ந்தேதி காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தால் ஆக்கிரமிப்பு செய்தது. இதனை கண்டித்து அங்கு உள்ள முஸ்லீம்கள் அல்லாத சிறுபான்மை இனத்தவர்கள் போராட்டத்தில்  குதித்துள்ளனர்.

மேலும் அக்,.22ஆம் தேதி நேற்று கருப்பு தினமாக அறிவித்துள்ள அவர்கள் ஆக்கிரமிப்பு எதிராக ஆர்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஓரணியாக திரண்டு போராட்டத்தை முன்னெடுத்து தலைவலி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் எதிர்ப்பு வலுவடைந்து வருவதால் இம்ரான் கானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

author avatar
kavitha