பட்ஜெட்டில் புறநானூற்று பாடல் மேற்கோள் காட்டியது.! தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவம்

இன்று மக்கள் அவளுடன் எதிர்பார்த்த பட்ஜெட் முதல் பெண் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிர்மலா சித்தாராமன் தாக்கல் செய்தார்.இதற்கு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட் குறித்து தெரிவிக்கையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் அனைத்து தரப்பினரின் வரவேற்புக்குரியதாக பட்ஜெட் இருப்பதற்கு பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் பாராட்டு புதிய முன் முயற்சிகளுக்கு வித்திடும் சிறப்பான அறிவிப்புகளை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.இது  மிகவும் பெருமை வாய்ந்த தருணம் என்று தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்த நிலையில் தற்போது துணைமுதல்வர்  பட்ஜெட்டில் புறநானூற்று பாடலை  மேற்கோள் காட்டியது தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவம்  என்று  பாராட்டி உள்ளார்

author avatar
kavitha