காலிப்பணியிடங்களை நிரப்ப செவிலியர்கள் போராட்டம்..!!

நாமக்கல்,
கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராமப்புறங்களில் உள்ள செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜாமணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பி.நந்தினி, மாவட்ட தலைவர் ஆர்.ராஜேந்திரபிரசாத், மாவட்ட செயலாளர் எல்.ஜெயக்கொடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் குப்புசாமி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வி.ஈழவேந்தன், பார்வையிழப்பு தடுப்பு பணியாளர் சங்க மாநில செயலாளர் ஆர்.கே.இளவரசி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர் முருகேசன் நிறைவுரை ஆற்றினார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment