கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 75 லட்சம் நிதி வழங்கிய என்.டி.ஆர்!

கொரோனா  வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள் கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் அரசு நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து உணவின்றி தவிக்கின்றன.

பல  நடிகர்கள் இதனால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகின்றனர். 75 லட்சம் பணத்தொகையை தற்பொழுதும் என்.டி.ஆர் பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்குமாறு வழங்கியுள்ளார். இதில் 50 லட்சத்தை ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து  தருமாறும், 25 லட்சத்தை தெலுங்கு திரை உலகில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
Rebekal