ஒரே மாநிலமாக இருந்த தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை 1956ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. இந்த நாளை மற்ற மாநிலங்கள் எல்லாம் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதேப்போல் நாமும் நவம்பர் 1 தேதியை “தமிழ் நாடு தினம்” ஆக கொண்டாட வேண்டும் என்று அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கையிட்டு வந்தனர்.
தற்போது இந்த கோரிக்கையை தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று நவம்பர் 1ம் தேதியை ‘தமிழ் நாடு தினம்’ ஆக கொண்டாடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்ற, அதிமுக தங்களது ட்விட்டரில்
“நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடு.
1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் – தமிழக அரசு அறிவிப்பு.” என ட்விட் செய்துள்ளார்.
நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடு.
1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் – தமிழக அரசு அறிவிப்பு. #TamilNaduDay
— AIADMK (@AIADMKOfficial) October 25, 2019