விமானத்தில் தமிழில் அறிவிப்பு -வைகோ கோரிக்கை

விமானத்தில் தமிழில் அறிவிப்பு -வைகோ கோரிக்கை

நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்றும் நடைபெற்று  வருகிறது.இன்று நடைபெற்ற மாநிலங்கவையில் மதிமுக பொதுச்செயலாளரும் .எம்.பி.யுமான வைகோ விமான சேவையை பற்றி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கோரிக்கையில்,தமிழ்நாட்டில்  இயக்கப்படும் விமான சேவையில் தமிழ் மொழியில் அறிவிப்புகளை அறிவித்தால்  பயணிகள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.இதைத்தான் மக்களும் விருப்புவார்கள் என்று வைகோ கோரிக்கையாக வைத்துள்ளார்.
மேலும் இந்தியாவில் இயங்கிவரும் விமான சேவையை அந்தந்த மாநில மொழிகளில் சேவையை அறிவித்தல் மக்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள் என்று வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார் .

author avatar
murugan
Join our channel google news Youtube