உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா..தைரியமா இருங்க – ரஜினிகாந்த் பிரார்த்தனை

சிகிச்சை பெற்று வரும் ரசிகருக்காக ஆடியோ வெளியிட்டுள்ளார்  நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினியின்  தீவிர ரசிகர் ஒருவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில்,தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த ஆடியோவில்,உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா..தைரியமா இருங்க.நான் இறைவனை பிராத்திக்கிறேன்.  சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வருவீங்க..குணமடைந்த பிறகு நீங்கள் குடும்பத்தோடு வீட்டுக்கு வாங்க  என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரசிகர் ,ரஜினியின் ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.