வடகிழக்கு பருவமழை ! தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவு

வடகிழக்கு பருவமழை ! தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், தேங்கிய நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று  முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube