பீகார் மாநிலத்தில் தலமைசெயலகத்தில் பணிபுரிந்து வரும் உழியர்கள் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய அம்மாநில அரசு தடைவித்துள்ளது.
இதுகுறித்து பீகாரின் தலைமைச் செயலாளர் மகாதேவ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் அலுவலகத்திற்கு வருவோர் அலுவலக விதி மீறி உடை அணியக்கூடாது என்றும் ஆடம்பரமின்றி எளிய உடையில் வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது உழியர்களுக்கிடையே ஒரு உயர்வு மனப்பான்மை இல்லாமல் வேலையில் கவனம் செலுத்த வழிவகுக்கும் என அம்மாநில அரசு கருதுகிறது..