தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்.உரிமம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்.
தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை.பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை இருந்தால் உடனே சரிசெய்யப்படும்.
2 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும். பாட புத்தகங்கள் அனுப்புவதில் குறைபாடுகள் இருக்குமானால் உடனே சரிசெய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.