மஹாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் விழுந்த பஸ் – 5பேர் பலி, 34 பேர் படுகாயம்!

மஹாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் விழுந்த பஸ் – 5பேர் பலி, 34 பேர் படுகாயம்!

மஹாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்ததால், சம்பவ இடத்திலேயே 5பேர் பலியாகியுள்ளனர்.

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பஸ் ஒன்று மல்காபூரிலிருந்து சூரத்துக்கு ஏறக்குறைய 50 பயணிகளுடன் சென்றுள்ளது. சென்று கொண்டிருந்த வழியில்நந்தூர்பார் எனும் இடத்திலிருந்த ஒரு பள்ளத்தாக்கில் எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 5 பேரில் பயணிகள் மூவர்தான், பஸ் டிரைவர் கிளீனர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
author avatar
Rebekal
Join our channel google news Youtube