பொது விடுமுறை இல்லை – மாநில தேர்தல் ஆணையம்

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • இன்றும்  வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .வாக்கு எண்ணிக்கை 2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

இன்றும்  வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,டிசம்பர் 14-ஆம் தேதி பொது விடுமுறை இல்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவை பெற வேண்டும் என்று  மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.