வேலூர் தேர்தல் !தற்போது வரை எந்த அரசியல் கட்சியும் புகார் எதுவும் வழங்கவில்லை-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூரில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் தேர்தலையொட்டி 19 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது . இதுவரை ரூ. 3.44 கோடி ஆவணமின்றி எடுத்து சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் தேர்தல் தொடர்பாக தற்போது வரை எந்த அரசியல் கட்சியும் புகார் எதுவும் வழங்கவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.