தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை – அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியளித்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.இன்று பேரவையில்  திமுக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது .இந்த தீர்மானத்திற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார்.அதில்  தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை .எந்த நிறுவனத்திற்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்துள்ளார்.