விஜய் அரசியல் கருத்து கூறக் கூடாது என யாரும் கூற முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் அரசியல் கருத்து கூறக் கூடாது என யாரும் கூற முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இது குறித்து  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் அரசியல் கருத்து கூறக் கூடாது என யாரும் கூற முடியாது. உண்மையான அரசியல் கருத்துக்களை சொன்னால் யாருக்கும் வருத்தம் கிடையாது. அப்படி இல்லை என்றால் அவருடைய மனசாட்சி அவரை குத்தும் என்று கூறினார்.மேலும்  இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து கட்சி தலைமை விரைவில் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.