சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை -அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமலாக்கத்துறை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்வில் நடைபெற்றது.

இதில் அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அந்த பதிலில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.சிதம்பரத்தை உரிய நேரத்தில் காவலில் எடுத்து விசாரிப்போம். நீதிமன்ற காவலில் சிதம்பரம் இருப்பதால் அவரால் சாட்சியங்களை அழிக்க முடியாது.தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.