இனிமேல் இந்த கொரோனாவால் ஒரு உயிர் கூட போக கூடாது – நடிகர் யோகிபாபு

இனிமேல் இந்த கொரோனாவால் ஒரு உயிர் கூட போக கூடாது – நடிகர் யோகிபாபு

கடந்த சில காலங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த இந்த கொரோனா வைரஸான, பல உயிர்களையும் காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் 700-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ள நிலையில், இதனை தடுப்பதாற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதுகுறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, ஊரடங்கிற்கு கீழ்ப்படிந்து, வெளியில்  வராமல் வீட்டிற்குள் இருக்குமாறும், இனிமேல் ஒருவர் கூட இந்த கொரோனாவால் பலியாக கூடாது என கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube