அத்திவரதரை தரிசிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை – பொன்.ராதா குற்றச்சாட்டு!

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு ஏற்படும் சரிவர செய்யப்படவில்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று பேசியுள்ள நிகழ்வில் தமிழக முதல்வர் உடனடியாக அமைச்சர்களை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சாதாரண திருவிழா காலங்களில் செய்யும் ஏற்பாடுகள் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் கர்ப்பிணி மற்றும் முதியவர்களை கோவிலுக்கு வரவேண்டாம் என்று கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

மேலும், தேவைப்பட்டால் திருப்பதி கோவில் நிர்வாகத்தில் பேசி அங்கு இருந்து சேவை செய்ய ஆட்களை அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.