ரஜினி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது -ஹெச்.ராஜா

  • நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
  • ரஜினி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்,.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று  ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதன் விளைவாக ரஜினி மீது கோவை உள்ளிட்ட இடங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில்,  . நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை .ரஜினி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.