#BREAKING:நிர்பயா குற்றவாளிகளுக்கு இரண்டாவது முறையாக தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு .!

#BREAKING:நிர்பயா குற்றவாளிகளுக்கு இரண்டாவது முறையாக தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு .!

நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடத் தடைக்கோரி  டெல்லி  நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்  ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை  விசாரித்த நீதிமன்றம் ,தூக்கு தண்டனையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடத் தடைக்கோரி டெல்லி  பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர்  ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,4 பேரில் சிலரின் சட்ட நடைமுறைகள் இன்னும் முடிவடையாததால் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.குற்றவாளிகள் தொடர்ந்த மனு மீதான விசாரணையை இன்று  ஒத்திவைத்தது நீதிமன்றம்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில்,வினய் குமாரை தவிர மற்ற 3 பேரை தூக்கிலிடலாம்.ஏனென்றால் வினய் குமாரின் கருணை மனு நிலுவையில் உள்ளது என்று  சிறை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நாளை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இரண்டாவது முறையாக தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.4 குற்றாவாளிகளில் அக்ஷய் குமாருக்கு மட்டும் சட்ட வாய்ப்புகள் முடித்துள்ளதால் மற்ற மூவருக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்ற கூறி மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று கூறி உத்தரவிட்டுள்ளது டெல்லி  நீதிமன்றம்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube