நிபா வைரஸ் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு நிபா தாக்குதல் இல்லை-கேரள சுகாதார அமைச்சர் சைலஜா

வேகமாக பரவி வருகிறது. நிபா வைரஸ் என்பது வௌவால்களின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும்.
இந்த ஆண்டும் கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் பலருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் கேரளாவில் உள்ள கொச்சிக்கு 6 பேர் கொண்ட மத்திய குழு வந்துள்ளது.
இந்நிலையில் கேரள சுகாதார அமைச்சர் சைலஜா  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு நிபா வைரஸ் தாக்குதல் இல்லை, ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு என்று தெரிவித்துள்ளார்.