நூலிலையில் சதத்தை தவறவிட்ட ரோகித்சர்மா! 177 ரன்கள் டார்கெட் செய்த இந்திய அணி…..

நூலிலையில் சதத்தை தவறவிட்ட ரோகித்சர்மா! 177 ரன்கள் டார்கெட் செய்த இந்திய அணி…..

இந்தியா-வங்கதேசம் அணிகள் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று  மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கவுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் ஷர்மா  89(31) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் . தவான் 35(27) மற்றம் ரெய்னா 47(30) ரன்கள் குவித்துள்ளார்.

 

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் பேட்டிங் செய்யவுள்ளது

முன்னதாக நடைப்பெற்ற 4 போட்டிகளின் முடிவுகளில் இந்தியா 2 போட்டிகளிலும், இலங்கை 1 போட்டியிலும் வங்கதேசம் 1 போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளது.

லீக் போட்டியின் முடிவில் அதிக புள்ளி பெற்றுள்ள அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்ற நிலையில், இப்போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில் இறுதி போட்டியில் விளையாடுவதை உறுதி செய்யும்.எனவே சர்வதேச இருபது ஓவர் போட்டியில் அவர் 3வது சதத்தை நழுவ விட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *