கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டது என்ற செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன்-மோடி.!

கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டது என்ற செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன்-மோடி.!

இரண்டாவது முறையாக இன்று பிரதமர் மோடி”மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாறினார்.அப்போது, மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில்,  இரண்டாவது முறையாக இன்று பிரதமர் மோடி”மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாறினார்.

 “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் பேசிய மோடி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு விட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன் என கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள். அரசின் ஒவ்வொரு துறைகளும், 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது.

அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன். மேலும் நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை.

நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர், ரிக்ஷாக்காரர் போன்றவர்களின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணர்ந்து வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube