புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள ஓம்பிரகாஷ் ராவத் கருத்து !

ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ஓம்பிரகாஷ் ராவத் இன்று பொறுப்பேற்க்க உள்ளார்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள ஓம்பிரகாஷ் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
Image result for ak joti
ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையராக ராவத் இன்று பதவியேற்க உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கருத்தை தாம் ஆதரிப்பதாக கூறினார்.

ராவத் ஓராண்டு பதவியில் உள்ளபோது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வடமாநில சட்டமன்றத் தேர்தல்களுடன், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல்களும் நடைபெற உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Leave a Comment