பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் ….!சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு….!

பெண்கள் விடுதி நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து சென்னை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் , உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகம் அமைக்க வேண்டும்.ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டடம் அமைக்க வேண்டும் .பதிவுச்சான்று மற்றும் உரிமம் இன்றி விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். பதிவின்றி இயங்கும் பெண்கள் விடுதி குறித்த புகார்களை 9444841072 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment