11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது- பன்னீர்செல்வம்

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் .நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அப்பொழுது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மருத்துவ வசதி பெறும் எண்ணத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று பேசினார்.