திருமணமான நான்காவது நாளே புதுப்பெண் வாந்தி! போலீசில் புகார் கொடுத்த மாப்பிள்ளை!

  • வெகுநாட்கள் திருமணம் ஆகாமல் இருந்ததால் திருமண தரகர் மூலம் பெண் பார்த்து இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
  • திருமணமான நான்காவது நாளே பெண் வாந்தி எடுத்ததால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில், பொள்ளாச்சி அருகே ஒரு இளைஞர் வெகுநாட்களாக திருமண யோகம் கூடி வராததால் விரக்தியில் இருந்தவருக்கு, திருமண தரகர் மூலமாக ஒரு பெண் பற்றி கேள்விப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு இவரே நகை போட்டு, திருமண செலவுகளையும் செய்து திருமணம் செய்துள்ளார்.

திருமணமான ஜோடி ஊட்டிக்கு சென்றது. அங்கு நான்கு நாட்கள் இருந்த ஜோடி திரும்பி வரும்போது பேரதிர்ச்சியுடன் வந்துள்ளனர். காரணம், அந்த பெண் திருமணமான நான்குநாட்களிலேயே வாந்தி எடுத்துவிட்டதாம். மருத்துவரிடம் சென்று பார்க்கையில் அப்பெண், கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

விஷயம் தெரிந்ததும் மணப்பெண்ணின் உறவினர்கள், திருமண தரகர்கள் தலைமறைவாகிவிட்டனராம். புதுமாப்பிளை போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.