விமானப்படையின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் ராகேஷ்குமார் சிங் பதோரியா

விமானப்படையின் 26-வது தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதோரியா பொறுப்பேற்றுக் கொண்டார்.

தற்போதைய விமானப்படை தளபதியாக  இருந்த பி.எஸ்.தனோவா இன்றுடன்  ஓய்வு பெற்றுள்ளார் .இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆர்.கே.எஸ்.பதாரியா தற்போது இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ளார்.

இந்நிலையில் இன்று இந்திய விமானப்படையின் 26-வது தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதோரியா பொறுப்பேற்றுக் கொண்டார்.