தேன் நிலவிற்கு சென்றபோது புது மாப்பிள்ளை உயிரிழப்பு..!

சென்னையில் உள்ள அமைந்தகரையை சார்ந்த அரவிந்த் என்பவருக்கும் , பிரீத்தி என்பவருக்கும் கடந்த 10-ம் தேதி திருமணம் நடந்து உள்ளது. இவர்கள் தேன் நிலவிற்காக சிம்லா சென்று உள்ளனர்.
அங்கு பாராக்ளைடிங் எனப்படும் பாரசூட் சாகசத்தை அரவிந்த்  , பிரீத்தி இருவரும் தனித்தனியாக பயணம் செய்து உள்ளனர்.முதலில் சென்ற பிரீத்தி பைலட் உதவியோடு பத்திரமாக தரையிறங்கினர்.
அதன் பின் பாரசூட் சாகசத்தை மேற்கொண்ட அரவிந்த் காற்றின் வேகம் காரணமாக பாரசூட்டின் கயிறு அறுந்து உள்ளது.நீண்ட நேரமாகியும் அரவிந்த் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பிரீத்தி சக பைலட்களிடம் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சக பைலட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அரவிந்த் சென்ற பாரசூட் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.பின் பள்ளத்தில் இருந்து அர்விந்த் உடல் மீட்கப்பட்டது.அரவிந்துடன் சென்ற பைலட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.திருமணம்  ஆகி ஒரு வாரத்திலே அரவிந்த் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

author avatar
murugan