பதிவுத்துறையின் இணையதளத்தில் ஆவணதாரர்களின் செல்ஃபோன் எண்ணை உள்ளீடு செய்ய புதிய வசதி…!

பதிவுத்துறையின் இணையதளத்தில் ஆவணதாரர்களின் செல்ஃபோன் எண்ணை உள்ளீடு செய்ய புதிய வசதி செய்துள்ளது பதிவுத்துறை.
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில். பதிவுத்துறையின் இணையதளத்தில் ஆவணதாரர்களின் செல்ஃபோன் எண்ணை உள்ளீடு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. செல்ஃபோன் எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் ஆவணப்பதிவின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். ஆவணம் திரும்ப வழங்க தயாராக உள்ளபோது அதற்கான எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என்றும்  பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment