சென்னை அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!

ஐ எஸ்எல் கால்பந்து 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.இந்த சீசனில் சென்னை எப்சி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர்.

சென்னை எப்சி அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளனர்.சென்னை எப்சி அணியின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி பெங்களூர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணி 0-3  என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.இதனால் சென்னை எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரகோரி பதவியில் இருந்து விலகுவதாக கூறிருந்தார் .

இதை தொடர்ந்து சென்னை எப்சி அணிக்கு இந்த சீசனில் தலைமை பயிற்சியாளராக ஸ்கட்லாந்து சார்ந்த 53 வயது மதிப்புதக்க ஓபன் கோய்லே  நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் போல்டன் வாண்டரர்ஸ் , ப்ர்ன்லி ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளர்களாக இருந்து உள்ளார்.

இவர் தலைமையில் சென்னை எப்சி அணி வருகின்ற 09-ம் தேதி ஜாம்ஷேட்பூர் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளனர்.

author avatar
murugan