நெல்லையில் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்….!!!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசியுள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மொத்தத்தில் 70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில், ஒரு வாழைக்கு ரூ.100 வீதம் இழப்பீடு வழங்குபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment