நெல்லை முன்னாள் மேயர் படுகொலை வழக்கு! பணிப்பெண்ணை எதற்காக கொன்றேன்?! – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் அவர் வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி உமா மகேஸ்வரி அவர்களின் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக பலகட்ட விசாரணை, தடையங்கள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகனான கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

இவர் கொடுத்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாலும், நீங்க பொலிஸ்தானே முடிந்தால் கண்டுபிடியுங்கள் என கூறியதும் போலீஸ்காரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பின்னர் இவரிடம் விசாரிக்கையில் பணிப்பெண் மாரியம்மாளை எதற்காக கொன்றார் என்ற காரணத்தை கூறியுள்ளார். அதில், ‘ அதில் உமா மகஸ்வரியையும், அவரது கணவரையும் கொலை செய்துவிட்டு, பார்க்கையில் பணிப்பெண் சமயலறையில் இருந்து வெளியே வந்து அதிர்ச்சியாகி கூச்சலிட்டார். பிறகு அவரை வீட்டை விட்டு செல்லுமாறு மிரட்டினேன்.ஆனால் அவர் போகவில்லை. பின்னர், கத்தியால் குத்தினேன். ரத்த வெள்ளத்தில் இருந்த அவர், தன்னை விட்டுவிடுமாறும், தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கெஞ்சினார். நான் அவருக்கு ஆண்குழந்தைகள்தான் இருப்பார்கள். எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என நினைத்தேன். ஆனால், அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பது எனக்கு தெரியாது.’ என திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.