வீரதம்பதியினரை அரிவாளால் தாக்கி கொள்ளை முயற்சி வழக்கு! போலீசாரிடம் ஒருவர் சிக்கினார்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர், கடையநல்லூர், கல்யாணிபுரத்தில் வசித்து வரும் சண்முகவேல் – செந்தாமரை எனும் வயதான தம்பதியினரை இரு கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கி கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அந்த வயதான தம்பதியினர் துணிச்சலுடன் போராடி அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை பலரும் பாராட்டினர். மேலும், அவர்களுக்கு சுதந்திர தினத்தன்று, முதல்வர் வீரதீர செயல்களுக்காக தமிழக அரசின் விருதையும் வழங்கினார்.
இந்த வழக்கை தீவிரமாக காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விசாரித்து வந்தார். இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில், ஒருவர் பிடிபட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் மீது ஏற்கனவே குற்றவழக்கு பதியப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.