Breaking News: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிப்படுகொலை!நெல்லையில் பதற்றம்

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  உட்பட மூவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகராட்சியின்  முதல் பெண் மேயராக கடந்த 1996 -ஆம் ஆண்டு திமுக சார்பில் பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி.

இந்த  நிலையில் இன்று நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில்  உள்ள அவரது வீட்டில் வைத்து  உமா மகேஸ்வரி ,அவரது கணவர் மற்றும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால்  நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது .மேலும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.அரசியல் காரணமா அல்லது சொத்து பிரச்னைகளா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.