#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!

#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!

இன்றைய 38-வது போட்டியில் கொல்கத்தா Vs பெங்களூர் அணிகள் மோதிவருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்
ராகுல் திரிபாதி இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில பந்தில் ராகுல் திரிபாதி 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய நிதீஷ் ராணா முதல் பந்திலேயே வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களில் சுப்மான் கில் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, 14 ரன்னில் கொல்கத்தா 4 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

பின்னர், மத்தியில் இறங்கிய கேப்டன் மோர்கன் சிறப்பாக விளையாடி 30 ரன்கள் எடுக்க பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க இறுதியாக கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பெங்களூர் அணி 85 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube