நீட் ஆள்மாறாட்ட வழக்கு ! மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம்

மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிகளில் படித்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பமாக மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ், ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.மாணவர்களின் முன்பே இந்த சோதனையை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.