பொறியாளர்கள் என்றால் விடா முயற்சி ! பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

பொறியாளர்கள் என்றால் விடா முயற்சி ! பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் காதலர் தினம்,நண்பர்கள் தினம்,அன்னையர் தினம் ,தந்தையர் தினம் உட்பட பல தினங்கள் கொண்டாடி வருகிறோம் .அந்த வகையில் தான் இன்று நாம் கொண்டாடும் தினம் பொறியாளர்கள் தினம்.

விஸ்வேஸ்வரய்யா நமது தேசத்தில் பொறியியல் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 1860-ஆம் ஆண்டு  செப்டம்பர் 15 தேதி பிறந்தார்.முழு பெயர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகும்.இவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 ம் தேதி ஆண்டுதோறும் பொறியாளர் தினம்  கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இன்று நாம் பொறியாளர்கள் தினத்தை கொண்டாடடுகிறோம்.

இந்த நிலையில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பொறியாளர்கள் என்றால் விடா முயற்சி மற்றும் உறுதி என்பது ஆகும். பொறியாளர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube