நாளை நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்-கே.எஸ்.அழகிரி 

நாளை நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்-கே.எஸ்.அழகிரி 

நாளை நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட  விருப்ப மனு தாக்கலும் நடைபெற்றது.ஆனால் வேட்பாளர் இன்னும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  நாளை  நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube