நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிப்பு

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான  பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.

இன்று நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில்  நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த ஹெச்.வசந்தகுமாரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார் என்றும் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment