கூடா நட்பு கேடு விளைவித்தது! தன் கணவரை கொன்றவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்!

கூடா நட்பு கேடு விளைவித்தது! தன் கணவரை கொன்றவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் செல்வி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் தினமும் குடித்துவிட்டு தொல்லை செய்வதை செல்வி, தனது நண்பரான பெருமாளிடம் கூறியுள்ளார்.
பெருமாளும் அதே குமரபாளையத்தை சேர்ந்தவர் தான். சம்பவத்தன்று பெருமாள், வெங்கடேசனை கூட்டிக்கொண்டு காவிரி நகருக்கு சென்று வெங்கடேசனுக்கு அதிகமாக மது வாங்கிக்கொடுத்து உள்ளார்.  வெங்கடேசனுக்கு அதிகமாக போதை ஏறியதை தொடர்ந்து, அவரை பெருமாள், காவிரி ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றிற்குள் தள்ளிவிட்டுதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை சம்பவம் பெருமாள், செல்வி தவிர வெளியில் யாருக்கும் தெரியவில்லை என தெரிகிறது. இதன் பின்னர்தான் பெருமாள் தன் கோர முகத்தை காட்டியுள்ளான். இந்த கொலை சம்பவத்தை வெளியில் சொல்லிவிடுவதாக மிரட்டி செல்வியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ளமுடியாத செல்வி, போலீசில் நடந்தது அத்தனையும் கூறி, சரணடைந்துள்ளார்.
தகவலறிந்த பெருமாள் போலீசில் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். இறந்ததாக கூறப்பட்ட வெங்கடேசனின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. காவிரி ஆற்றில் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube