தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், சாணியை பூசியுள்ளனர்.
உலக புகழ்பெற்ற நூலான திருக்குறளை எழுதிய, திருவள்ளுவரை மதிக்க வேண்டிய இடத்தில், இவ்வாறு அவமரியாதையான முறையில் மர்ம நபர்கள் செயல்பட்டிருப்பது அப்பாகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறியும் வகையில், போலீசார் அப்பகுதியில் விசாரணையில் ஈடுபட்டு வருகினறனர்.